தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதுதொர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் புதிய தலைவர் நியமிப்பது தொடர்பான அறிவிப்பு பொங்கலுக்கு பிறகு வெளியாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருநாவுக்கரசரை தமிழக காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் நியமித்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இவ்வாறு கூறியிருப்பது காங்கிரஸ் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.