கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைப்பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட காலநிலை காணப்படும். சென்னையில் பகுதி நேரம் மேகமூட்டமாக காணப்படும். பல இடங்களில் காலை வேளையில் பனிப்புகை காணப்படும் என்றார் அவர்.