உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து பேசும்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டி தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆணையம் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை மறுவரையறை செய்யும் வகையில், இடஒதுக்கீடு குறித்த தனது பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி இறுதி அறிவிக்கை வெளியிடப்படும். மறு வரையறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழகத்தில் விரைவில் நடைபெறும் என்றார்.