தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாள்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜன.14-ஆம் தேதி முதல் ஜன.17-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும். உள் மாவட்டங்களில் மலையோரப் பகுதிகளில் உறைபனி காணப்படும். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் மலையோரப்பகுதிகளில் சில இடங்களில் உறைபனி இருக்கும். சென்னையில் பகுதிநேரம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடு பனி காணப்படும்.