தமிழகத்தில் வறண்ட வானிலை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாள்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாள்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜன.14-ஆம் தேதி முதல் ஜன.17-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும். உள் மாவட்டங்களில் மலையோரப் பகுதிகளில் உறைபனி காணப்படும். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் மலையோரப்பகுதிகளில் சில இடங்களில் உறைபனி இருக்கும். சென்னையில் பகுதிநேரம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடு பனி காணப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com