எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: தமிழகத்தைச் சேர்ந்த பிஎஸ்எஃப் வீரர் மரணம்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் தமிழகத்தைச் சேர்ந்த பிஎஸ்எஃப் வீரர் மரணம் அடைந்தார்.
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: தமிழகத்தைச் சேர்ந்த பிஎஸ்எஃப் வீரர் மரணம்


ஜம்மு: இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் தமிழகத்தைச் சேர்ந்த பிஎஸ்எஃப் வீரர் மரணம் அடைந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ். புரா பகுதியில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மரணம் அடைந்தார். மற்றொரு வீரரும், கிராம மக்கள் சிலரும் காயமடைந்தனர்.

இந்த நிலையில், வீரமரணம் அடைந்தவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் பண்டாரசெட்டிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், இவர் 1995ம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து, 78வது பட்டாலியனில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது.

இவருக்கு மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com