தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும், அதுவரை தற்போது நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்கவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும். மேலும் இவ்விவகாரத்தில் மாணவர்களுக்கு சாதமாகவே தமிழக அரசு செயல்படும். உச்சநீதிமன்றத்தின் ஆலாசனைபடிதான் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.