கல்விக்கடன் விவகாரம்: ஆவணங்களை தாக்கல் செய்ய வங்கிக்கு உத்தரவு

செவிலிய மாணவிக்கு கல்விக்கடன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில் வங்கி நிர்வாகம் ஆவணங்களைத் தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

செவிலிய மாணவிக்கு கல்விக்கடன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில் வங்கி நிர்வாகம் ஆவணங்களைத் தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இதுதொடர்பாக, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி தீபிகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் நர்சிங் படிக்கிறேன். பாரத ஸ்டேட் வங்கியின் தலைஞாயிறு கிளையில் கல்விக் கடன் கோரி விண்ணப்பித்தேன். ஆனால் வங்கி நிர்வாகம் கல்விக்கடன் வழங்க மறுத்துவிட்டது. ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கல்விக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாணவியின் தந்தை ஏற்கெனவே வாங்கிய கடனை கட்டத் தவறியதால், அவரது மகளுக்கு கல்விக்கடன் வழங்க மறுத்து வங்கி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான்' என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மாணவி தீபிகா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் எனது தந்தை எந்த கடனும் வாங்கவில்லை, ஆனால் எனது தந்தையின் மீது பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் பழி சுமத்தியுள்ளது. எனவே, இதற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவியின் தந்தை கடன் பெற்றுவிட்டு கடனை திருப்பிச் செலுத்தாதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பான ஆவணங்களை வங்கி நிர்வாகம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 17 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com