சிறுமி வன்கொடுமைக்கு காரணமான அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 7ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் 17 பேர் மீதும் போஸ்கோ, கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுறித்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
சிந்திக்க முடியாத மோசமான நிகழ்வு சென்னை சிறுமிக்கு நடந்துள்ளது. இப்படிபட்ட குற்றங்களுக்கு தூக்கு தண்டனை தான் சரி. பெண் குழந்தைகளை சீரழிக்கும் மிருகங்களுக்கு மனிதாபிமானம் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.