மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்கிழமை இரவு நிலவரப்படி 100 அடியாக உயர்ந்தது.
கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி வீதம் வந்து கொண்டிருந்தது. இதனால் காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் பகுதியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து செவ்வாய்கிழமை இரவு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. காவிரியில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.