சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி தமிழக அரசின் க்ரூப் 4 பிரிவு பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன. ஏறத்தாழ 8351 பதவிகளுக்கு நடைபெற்ற இந்தத் தேர்வில் சுமார் 20 லட்சம் பேர் பங்கு பெற்றனர்.
இந்த தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இந்த தேர்வு முடிவுகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.