சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக முருகேசன், சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக இருந்த செ.மணியனின் பதவிக் காலம் கடந்த 27-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய துணைவேந்தர் நியமனம் குறித்து பரிந்துரை செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முருகேசன் நியமிக்கப்பட்டார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதிய துணைவேந்தரை நியமித்து சனிக்கிழமை உத்தரவிட்டார்.
புதிய துணைவேந்தரான முருகேசன், அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.