பருவமழைக்கு முன் கொசு ஒழிப்பில் ஈடுபடுமாறு கூறிய திமுக உறுப்பினரிடம், மழை வேண்டுமா, வேண்டாமா என்று பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
பேரவையில் சுகாதாரத் துறைற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் மாசிலாமணி பேசும்போது, ‘கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் உள்ளோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டனா்.
அதனால், பருவமழை வருவதற்கு முன்பே, கொசு உற்பத்தியாகாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்’ என்றார்.
அப்போது பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் குறுக்கிட்டு, ‘உங்களுக்கு மழை வேண்டுமா, வேண்டாமா’ என்றதும், பேரவையில் உள்ள அனைவரும் சிரித்தனா்.
பிறகு திமுக உறுப்பினா் மாசிலாமணி, ‘மழை வேண்டும், கொசுதான் வேண்டாம்’ என்றார்.