18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 3-ஆவது நீதிபதியாக எஸ்.விமலா நியமனம்

டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க 3-ஆவது நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 3-ஆவது நீதிபதியாக எஸ்.விமலா நியமனம்

டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க 3-ஆவது நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.
3-ஆவது நீதிபதி ஏன்?: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை கடந்த வியாழக்கிழமை வழங்கியது. மேலும் 3-ஆவது நீதிபதியின் விசாரணைக்குப் பரிந்துரைத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார். 3-ஆவது நீதிபதி யார் என்பதை சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான ஹூலுவாடி ஜி.ரமேஷ் முடிவு செய்வார் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
பதிவுத் துறைக்கு...இதைத் தொடர்ந்து இவ்வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக நீதிபதி எஸ்.விமலாவை நியமனம் செய்து, பதிவுத் துறைக்கு நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் திங்கள்கிழமை உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி எஸ்.விமலாவுக்கு தகவல் கடிதத்தை பதிவுத் துறை அனுப்பியது. 
வழக்கு கடந்து வந்த பாதை: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் பேரவைத் தலைவரிடம் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன் மட்டும் பேரவைத் தலைவர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 
மாறுபட்ட தீர்ப்பு: இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் இருவரும் சேர்ந்து மொத்தம் 327 பக்க தீர்ப்பை அளித்தனர். இதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 192 பக்கங்கள் கொண்ட தீர்ப்பையும் நீதிபதி எம்.சுந்தர் 135 பக்கங்கள் கொண்ட தீர்ப்பையும் அளித்தனர். 
18 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அளித்த தீர்ப்பு செல்லும்' என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது' என நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
மேலும் வழக்கை 3-வது நீதிபதியின் விசாரணைக்கு தலைமை நீதிபதி பரிந்துரைத்து உத்தரவிட்டார். 
அதன்படி 3-ஆவது நீதிபதியாக நீதிபதி எஸ். விமலாவை மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
நீடிக்கும் பரபரப்பு: அரசியல் ரீதியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் தற்போது 3-ஆவது நீதிபதியின் பெயர் (நீதிபதி எஸ். விமலா) அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, வழக்கின் விசாரணை எப்போது தொடங்கும் என்ற ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
வழக்கை வாபஸ் பெறுவேன்


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு வழங்கியுள்ள மாறுபட்ட தீர்ப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறப் போகிறேன்'' என்று டிடிவி தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டுவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: எந்தத் தவறும் செய்யாத எங்களுக்கு (எம்.எல்.ஏ.க்கள்) நீதிமன்றத் தீர்ப்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 
எனவே, தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறப் போகிறேன்'' என்றார் தங்க தமிழ்ச்செல்வன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com