திமுக முன்னோடிகளின் உழைப்புக்கு விலையே கிடையாது: மு.க.ஸ்டாலின்

திமுகவுக்காக உழைத்த முன்னோடிகளின் உழைப்புக்கெல்லாம் விலையே கிடையாது என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக முன்னோடிகளின் உழைப்புக்கு விலையே கிடையாது: மு.க.ஸ்டாலின்

திமுகவுக்காக உழைத்த முன்னோடிகளின் உழைப்புக்கெல்லாம் விலையே கிடையாது என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் அதன் தலைவர் மு.கருணாநிதியின் 95-ஆவது பிறந்த நாள் விழாவும், திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவும் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மூத்த முன்னோடிகள்195 பேருக்கு பொற்கிழி வழங்கிப் பேசியதாவது: 
திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நல உதவிகள், ரத்த தான முகாம்கள் என திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.
இன்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் கம்பீரமாக நிற்பதற்குக் காரணம் இயக்கத்துக்காகப் பாடுபட்ட முன்னோடிகள்தான். அவர்களுக்குச் சிறப்பு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கு வழங்கப்படும் பொற்கிழியை உங்கள் உழைப்புக்கான சன்மானம் என்று நீங்கள் கருதக் கூடாது. நீங்கள் உழைத்த உழைப்புக்கு விலையே கிடையாது என்றார்.
மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் அமைச்சர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலர் எ.வ.வேலு தலைமை வகித்தார். தணிக்கைக் குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, நகர்மன்ற முன்னாள் தலைவர் இரா.ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் துர்கா ஸ்டாலின், செங்கம் எம்.எல்.ஏ. மு.பெ.கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com