திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாக்ஸர் முரளி என்ற கைதியை, சக கைதிகள் பயங்கரமாக தாக்கி கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை, வழிப்பறி உட்பட 16 வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ரவுடி முரளி. இவர் வியாசர்பாடியைச் சேர்ந்தவர்.
இதே புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 ரவுடிகளுக்கும், முரளிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை சிறையின் கழிவறைக்குள் வைத்து 5 ரவுடிகளும் முரளியை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
முரளியின் உடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.