திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் புதன்கிழமை காலையில் வெயில் நிலவியது. மதியம் மிதமான சாரல் பெய்ததுடன், வானம் மேகமூட்டமாகக் காணப்பட்டது. குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக பேரருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. ஆனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. நாள் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.