தமிழ்நாடு
அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகமெங்கும் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: தமிழகமெங்கும் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகமெங்கும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் பெருகியுள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதின்றம் வெள்ளியன்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அது கூறியுள்ளதாவது.
தமிழகமெங்கும் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும்.
அதேபோல அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களும் தங்களது சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.