12-இல் திருச்சியில் சர்வதேச மகளிர் தின விழா: டிடிவி தினகரன் அணி சார்பில் நடைபெறுகிறது

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, வரும் 12-இல் திருச்சியில் முப்பெரும் விழா நடைபெறும் என டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, வரும் 12-இல் திருச்சியில் முப்பெரும் விழா நடைபெறும் என டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மகளிர் தினத்தையொட்டி மாபெரும் சிறப்புக் கருத்தரங்கம், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஜெயலலிதா 70-ஆவது பிறந்த தினம் ஆகிய முப்பெரும் விழா வரும் 12-ஆம் தேதி திருச்சியில் உள்ள ரோஷன் மஹாலில் நடைபெறும். ஆர்.கே. நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ரங்கசாமி, முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட பலரும் உரையாற்ற உள்ளனர் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com