சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, வரும் 12-இல் திருச்சியில் முப்பெரும் விழா நடைபெறும் என டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மகளிர் தினத்தையொட்டி மாபெரும் சிறப்புக் கருத்தரங்கம், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஜெயலலிதா 70-ஆவது பிறந்த தினம் ஆகிய முப்பெரும் விழா வரும் 12-ஆம் தேதி திருச்சியில் உள்ள ரோஷன் மஹாலில் நடைபெறும். ஆர்.கே. நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ரங்கசாமி, முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட பலரும் உரையாற்ற உள்ளனர் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.