இயந்திரக் கோளாறு: சிங்கப்பூர் விமானம் சென்னையில் தரையிறக்கம்

இயந்திரக் கோளாறு காரணமாக துபையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இயந்திரக் கோளாறு காரணமாக துபையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
துபையிலிருந்து சிங்கப்பூருக்கு 298 பயணிகளுடன் விமானம் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தின் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானிகளின் விரைவான நடவடிக்கை காரணமாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பியதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com