திருப்பதி ஏழுமலையானை அஹோபில மடத்தின் ஜீயர் ஸ்ரீமன் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மகா தேசிகன் சுவாமிகள் வழிபட்டார்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள அஹோபில மடத்தின் 46-ஆவது ஜீயரான ஸ்ரீமன் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் திங்கள்கிழமை காலை திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை அளித்து வரவேற்று, ஏழுமலையானை தரிசிக்க அழைத்துச் சென்றனர். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு ஏழுமலையானின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.