கோவை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி முகமது அன்சாரிக்கு 20 நாள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இவ்வழக்கில் முகமது அன்சாரி உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மகளுக்கு திருமண எற்பாடுகள் செய்ய 2 மாத பரோல் கேட்டு அன்சாரியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 20 நாட்கள் பரோலில் செல்ல முகமது அன்சாரிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.