தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணியில் வரும் ஜூன் மாதம் வரை மலையேற்றப் பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனியில் செவ்வாய்க்கிழமை மேகமலை வன உயிரினக் காப்பாளர் எஸ். ராம்மோகன் கூறியது: மேற்குத் தொடர்ச்சி வனப் பகுதியில் வரும் ஜூன் மாதம் வரை மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க அரசு தடை விதித்துள்ளது. எனவே, குரங்கணி-டாப் ஸ்டேஷன் வனப் பகுதியில் ஜூன் மாதம் வரை மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதியில்லை என்றார்.