தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தென்சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிககள் தேர்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ரஜினி பேசிய விடியோ பதிவு ஒன்று ஒளிபரப்பப்பட்டது.
அதில், பிற மாநிலத்தவர்கள் வியந்து பார்க்குமளவுக்கு தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆண்டவன் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார், அதனை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
பதவி கிடைக்கவில்லை என மன்றத்தினர் யாரும் பொறாமையில் செயல்படக்கூடாது. ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.