திங்கள், செவ்வாய் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை கடற்ரை - வண்ணாரப்பேட்டை பிரிவில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
திங்கள், செவ்வாய் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை கடற்ரை - வண்ணாரப்பேட்டை பிரிவில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
 கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை இடையே திங்கள்கிழமை இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூர்மார்க்கெட் வளாகம் வரையே செல்லும். இந்த மின்சார ரயில் சென்னை கடற்கரையை சென்றடையாது.
 இதேபோன்று, சென்னை கடற்கரை -அரக்கோணம் இடையே செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து அதிகாலை 1.25 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com