சென்னை கடற்ரை - வண்ணாரப்பேட்டை பிரிவில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை இடையே திங்கள்கிழமை இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூர்மார்க்கெட் வளாகம் வரையே செல்லும். இந்த மின்சார ரயில் சென்னை கடற்கரையை சென்றடையாது.
இதேபோன்று, சென்னை கடற்கரை -அரக்கோணம் இடையே செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து அதிகாலை 1.25 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.