தமிழ்நாடு
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு செல்ல சுற்றுலா
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் வெள்ளிக்கிழமை முதல் தடை விதித்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் மழைபெய்து வந்ததால் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டது.
தொடர்ந்து 3 நாள்கள் நீர்வரத்து சீராக இருந்த நிலையில், வியாழக்கிழமை இரவு கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர்.