தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய போராட்டக்காரர்கள் மீது போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்றுவரும் போராட்டம் செவ்வாய்க்கிழமை 100}ஆவது நாளை எட்டியது. இதையொட்டி, அந்த ஆலையை மூடக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டம் நடைபெற்றது. அப்போது, நேரிட்ட வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸôர் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு ராகுல் காந்தி சுட்டுரையில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் அநீதிக்கு எதிராகப் போராடியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழக அரசு பயங்கரவாதத்தை ஊக்குவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். வன்முறையில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று அந்தப் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.