துப்பாக்கிச் சூடு: 'வலியில் இருக்கிறேன்' - வேதாந்தா குழும உரிமையாளர் அனில் அகர்வால் 

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இன்று 3வது நாளாக தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
துப்பாக்கிச் சூடு: 'வலியில் இருக்கிறேன்' - வேதாந்தா குழும உரிமையாளர் அனில் அகர்வால் 


தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இன்று 3வது நாளாக தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந்த சம்பவத்தால், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்கி வரும் வேதாந்தா குழுமம் கடும் விமரிசனங்களை சந்தித்துள்ளது.

தமிழகம் முழுவதும் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 3வது நாளாக இன்றும் தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பவில்லை.

இந்த நிலையில், வேதாந்தா குழுமத்தின் நிர்வாகி அனில் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கவலையை தெரிவித்துள்ளார்.
 

அதில், தூத்துக்குடியில் நிகழ்ந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தை அறிந்து கவலையில் ஆழ்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com