அரசுப் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் புதன்கிழமை வெளியிட்ட அறி
விப்பு:- தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை (மே 24) முதல் வரும் 31 -ஆம் தேதி வரையில் நடத்தப்பட இருந்த அரசுப் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள் நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. மறுதேர்வுகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.