தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றுகள் கடந்த 2 மாதங்களாக அதிகம் பரவி வருகிறது. மேலும் இதுபோன்ற காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக தமிழக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை தரும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும் தேவையற்ற மருந்துகளை அளித்தாலும் இந்திய மருத்துவ கௌன்சில் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.