திருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக கே.கே.ரமேஷ் தொடர்ந்த பொதுநல வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும்? என்றும் திருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன? என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேலும் 2 தொகுதிக்கான தேர்தல் கால அட்டவணை ஏதும் இருந்தால் அதனை நவம்பர் 26ஆம் தேதிக்குள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கையும் அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.