ரஜினி யார் என்பதை மக்கள் முடிவு செய்வர்: அமைச்சர் டி.ஜெயக்குமார்

அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் யார் என்பதை மக்களே முடிவு செய்வர் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.
ரஜினி யார் என்பதை மக்கள் முடிவு செய்வர்: அமைச்சர் டி.ஜெயக்குமார்


அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் யார் என்பதை மக்களே முடிவு செய்வர் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி:-ராஜீவ் கொலை வழக்கில் கைதான ஏழு பேர் பற்றிய கேள்விக்கு எந்த 7 பேர் என்று ரஜினிகாந்த் எதிர் கேள்வி கேட்டிருப்பதாக திங்கள்கிழமை செய்திகள் வந்தன. ரஜினிகாந்த் அரசியலைப் பற்றி மாறி, மாறி பேசி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த ரஜினிகாந்த், ஏழு பேரை தனக்கு தெரியும் என்று பெரிய விளக்கம் அளித்துள்ளார். இதை அவர் திங்கள்கிழமையே கூறியிருக்க வேண்டும். சினிமாவில் அவர் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் அரசியலில் ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் முடிவு செய்வர்.
பாஜக ஆபத்தான கட்சியா என்று கேள்வி எழுப்புகிறீர்கள். ஒரு கட்சி ஆபத்தானதா இல்லையா என்று சான்றிதழ் வழங்குவதற்கு நான் சென்சார் போர்டு அல்ல. பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்து வருகிறது.
பாஜக தலைவர்களை அதிமுகவினர் அடிக்கடி சந்தித்து வருகின்றனர். இந்தச் சந்திப்புகள் தமிழகத்தின் நலன் கருதியே நடைபெறுகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழக திட்டங்கள் குறித்தே பேசியிருக்கிறார். மேலும் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து நாங்கள் மத்திய அமைச்சரைச் சந்தித்து வருகிறோம். இதில் எந்த அரசியலும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com