கல்வி உதவித் தொகை புதுப்பிப்பு விண்ணப்பம்: சி.பி.எஸ்.இ. வரவேற்பு

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து மத்திய அரசு கல்வி உதவித் தொகைக்கான புதுப்பிப்பு விண்ணப்பத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வரவேற்றுள்ளது.


கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து மத்திய அரசு கல்வி உதவித் தொகைக்கான புதுப்பிப்பு விண்ணப்பத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வரவேற்றுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, உயர் கல்வி பெறுவதற்கான கல்வி உதவித் தொகையை படிப்பு க் காலம் முழுவதும் மத்திய அரசு வழங்குகிறது. 
கடந்த 2014-இல் இந்த மத்திய கல்வி உதவித் தொகையை வாங்க ஆரம்பித்த கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து 4-ஆவது புதுப்பித்தல் விண்ணப்பத்தை சி.பி.எஸ்.இ. வரவேற்றுள்ளது. 
இந்த விண்ணப்பப் படிவம் www.cbse.nic.in  என்ற இணையதளத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவு செய்ய டிசம்பர் 15 கடைசி நாளாகும். அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சமர்ப்பிக்க டிசம்பர் 31 கடைசி நாள் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com