கஜா புயல் காரணமாக கொடைக்கானலில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கஜா புயல் காரணமாக நேற்று கொடைக்கானல் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதன் காரணமாக சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
கொடைக்கானல் அருகே சின்னப்பள்ளம் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ரவி, சுந்தரராஜன், ராஜேந்திரன், கார்த்திக் ஆகிய 4 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புதுறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.