சென்னையின் தி.நகர் பகுதியில் அமைந்துள்ள அன்னை சத்யா பஜாரில் போலீஸார் சனிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருட்டு செல்ஃபோன்கள் வாங்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மொத்தமுள்ள 33 கடைகளில் போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் 700 செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து பறிமுதல் செய்த செல்ஃபோன்களின் ஐ.எம்.இ.ஐ எண்ணை தணிக்கை செய்யும் பணியில் தற்போது போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.