கஜா புயல் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து வருவதால், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமையும் (நவ. 20) விடுமுறை விடப்படுகிறது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர்கள் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புயல் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து வருவதால், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமையும் (நவ. 20) விடுமுறை விடப்படுகிறது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதேபோன்று திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.