கஜா புயலுக்கு தேமுதிக சார்பில் ரூ.1 கோடிக்கு நிவாரணப்பொருட்கள்: விஜயகாந்த் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 
கஜா புயலுக்கு தேமுதிக சார்பில் ரூ.1 கோடிக்கு நிவாரணப்பொருட்கள்: விஜயகாந்த் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவனத்தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் போன்ற கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பாக ஒரு கோடி ரூபாய்க்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்படும். இதற்கு மற்ற மாவட்டங்கள் அவரவர்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப்பொருட்களான உணவு பொருட்கள் அரிசி, பிரட், பால் பாக்கெட், குடிதண்ணீர் பாட்டில், தென்னைகன்று, வாழை கன்று, குடம், சேலை, வேஷ்டி, போர்வை, துண்டு, கொசுபத்தி, மெழுகுவர்த்தி, இதுபோன்ற அத்தியாவசிய பொருட்களை அந்தந்த மாவட்டத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும்.

மேலும் முதல் கட்டமாக திருவாரூர், நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (20.11.2018) நேரில் சந்தித்து நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. மீண்டும் இரண்டாம் கட்டமாக தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் போன்ற பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து தேமுதிக சார்பில் நிவாரண உதவிப் பொருட்களை ஓரிரு நாட்களில் வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com