கஜா புயல் பாதித்தப் பகுதிகளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையைக் கடந்ததால் நாகை, தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், புயல் பாதிப்புகளையும், சேதங்களையும் நேரில் பார்வையிட தமிழக ஆளுநர் இன்று காலை நாகை மாவட்டம் சென்றார். அங்கு புயல் பாதிப்புகளை நேரில் பார்த்தும், விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் பாதிப்பு மற்றும் சேதம் குறித்து அவர் நேரில் கேட்டறிந்தார்.