மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டம் புதன்கிழமை கூடுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்குக் கூடும் இந்தக் கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார்.
பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவின் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
2019-இல் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுமாறும் நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட உள்ளார்.