திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,
"திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் 'கலைஞர் அரங்கத்தில்' நடைபெறும்.
அதுபோது, மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.