அதிமுக, திமுக தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும், ஆட்சி முழுமையாக நீடிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ, செவ்வாய்கிழமை தெரிவித்தார். 
அதிமுக, திமுக தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும், ஆட்சி முழுமையாக நீடிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ, செவ்வாய்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக கோவில்பட்டியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:

தினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் தங்கி இருப்பதால், அதிமுக அரசுக்கு எவ்வித சிக்கலும், பாதிப்பும் இல்லை. எனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும்.

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் செயல்படவில்லை, இப்படியே செயல்பட்டால், அவருக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தினை கூட மக்கள் தரமட்டார்கள்.

பல தலைவர்கள், நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது சில கருத்துகளை தெரிவிப்பார்கள், களத்திற்கு வந்த பின்பு தான் யார் நிலைக்க முடியும், நீடிக்க முடியும் என்று தெரியும்.

தேமுதிக எவ்வளவு வேகமாக வளர்ந்ததோ அந்த அளவுக்கு தேய்ந்து வருகிறது. அதிமுக, திமுக தான் தமிழகத்தில் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com