காஞ்சிபுரம் நாட்டு வெடி விபத்து: 3 பேர் சாவு

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடி வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் நாட்டு வெடி விபத்து: 3 பேர் சாவு

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடி வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் 35-வது வார்டில் நாகலு தெருவில் முஸ்தாக் அகமது என்பவரது வீட்டில் அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், அந்த வீட்டில் திடீரென செவ்வாய்கிழமை நடந்த வெடி விபத்தில்  நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் வீட்டில் இருந்த முஸ்தாக் அகமது, சாய்ரா, மஸ்தான் என்ற மூன்று பேர் உயிரிழந்தனர்.

சர்புதீன் என்பவர் படுகாயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com