சென்னையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க 82 நடமாடும் மருத்துவ குழுக்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க 82 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க 82 நடமாடும் மருத்துவ குழுக்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க 82 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பன்றிக் காய்ச்சல் பருவ கால நோய், மக்கள் பயப்பட வேண்டாம். காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது; அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது. 

வீடுகள், நிறுவனங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் இடங்களை வைத்திருப்போர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சென்னையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க 82 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com