குட்கா ஊழல்: கிடங்குக்குக் கொண்டு சென்று மாதவராவிடம் விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள்

குட்கா ஊழலில் கைது செய்யப்பட்ட மாதவராவை, சிபிஐ அதிகாரிகள் இன்று செங்குன்றத்தில் உள்ள கிடங்குக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
குட்கா ஊழல்: கிடங்குக்குக் கொண்டு சென்று மாதவராவிடம் விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள்


சென்னை: குட்கா ஊழலில் கைது செய்யப்பட்ட மாதவராவை, சிபிஐ அதிகாரிகள் இன்று செங்குன்றத்தில் உள்ள கிடங்குக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

குட்கா ஊழல் வழக்கில், மாதவரத்தில் உள்ள குட்கா கிடங்கின் உரிமையாளர்கள் மாதவராவ் உட்பட 5 பேரை கைது செய்த சிபிஐ, 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

வெள்ளிக்கிழமையுடன் இவர்களது போலீஸ் காவல் முடிவடையும் நிலையில், மாதவராவை, இன்று செங்குன்றம் அழைத்துச் சென்றுள்ள சிபிஐ அதிகாரிகள், குட்கா பறிமுதல் செய்யப்பட்ட கிடங்கில் முக்கிய ஆதாரங்களைத் திரட்டவும், விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com