மின்வெட்டு குறித்து அமைச்சர்கள் முரண்பாடான கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பதவி கொடுக்கவில்லை என்றால் காட்டிக் கொடுப்பார் என்ற அச்சம் காரணமாகத்தான் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பவில்லை என சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இலங்கை இறுதிப்போரில் இந்தியா உதவியதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபட்ச பேட்டியில் கூறியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
தமிழகத்தில் மின் தடையே இருக்காது என ஒரு அமைச்சர் சொல்கிறார். ஆனால் முதல்வர் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புகிறார். முதலில், அமைச்சர்கள் உட்கார்ந்து நாட்டின் நிலைமையை பேசி, அதன் பிறகு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார்.