சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சனிக்கிழமை காலை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக அரசு மீது குற்றம்சாட்டுவதையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார். ஊழல் குறித்து பேச திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தகுதி கிடையாது. திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது. இதற்காக ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார்.
என்னை அரிச்சந்திரன் என கூறிய கருணாஸுக்கு நன்றி. சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது. ஸ்டாலின் அதனை கண்டிக்காதது ஏன்?. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். திறக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.