அதிமுக அரசைக் கண்டித்து வரும் அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லியில் அக்டோபர் 3 -ஆம் தேதி நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்திலும், அக்டோபர் 4 -ஆம் தேதி புரசைவாக்கம் தானா தெருவில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பங்கேற்று உரையாற்றுவார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.