வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முசிறியில் 70 மி.மீ.: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருச்சி மாவட்டம் முசிறி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய இடங்களில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம், சிட்டாம்பட்டியில் 40 மி.மீ., கரூர் மாவட்டம் குளித்தலையில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.