சென்னை: குட்கா ஊழல் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சிவக்குமாரை கைது செய்துள்ளது.
குட்கா ஊழல் வழக்கில் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 6வது நபராக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவக்குமாரை அக்டோபர் 4ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.