• "எல்லாத்தையும் பறி கொடுத்த மாதிரி வர்றீங்களே, ஏன்?''
"என் மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டு வர்றேன்''.
• "கமலா காப்பி தர்றீயா?''
"இப்ப கொடுத்தேனே!''
" சொல்லக் கூடாதா. நான் வெந்நீர்ன்னு நினைச்சு வாய் கொப்பளிச்சிட்டேன்''
பி. கவிதா, சிதம்பரம்.
• "படத்துல நடிச்சிருக்கேன்னு சொன்ன... ஆனா படத்துல ஆளையே காணோம்...!''
"தலைமறைவு குற்றவாளியா நடிச்சிருக்கேனே... நீங்க எப்படி பார்க்க முடியும்...! அந்தப் படத்துல வர்ற போலீஸôலேயே கண்டுபிடிக்க முடியல...!''
க.நாகமுத்து, திண்டுக்கல்.
• "பொண்ணுகிட்ட அஞ்சு நிமிஷம் தனியா பேசணும்னு சொல்லிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வர்றீங்களே மாப்பிள்ளை?''
"சத்தியமா நான் அஞ்சு நிமிஷம்தான் பேசினேன் மாமா. மீதி ஐம்பத்தைந்து நிமிஷமும் உங்க பொண்ணுதான் பேசினா''.
சி.ஆர்.ஹரிஹரன், அலுவா.