நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை விடுதலைப் போராட்டக் காலத்தில் சிறையில் இருந்தபோது, அங்கு கொடுக்கப்பட்ட தரமற்ற உணவால் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையறிந்த வைத்தியநாத ஐயர் சத்தான உணவை வாங்கி சாப்பிடச் சொல்லி பணம் கொடுத்து உதவினார். ஆனால் அப்பணத்தைக் கொண்டு உணவுப் பொருள்களை வாங்காமல் திருக்குறளுக்கு உரை எழுதத் தேவையான தாள், எழுது பொருள்கள், புத்தகங்கள் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு சிறையில் இருந்தபடியே திருக்குறளுக்கு உரை எழுதினார்.
கோகுல முத்தரசனின் "இராமலிங்கனார் ஒரு பார்வை' நூலிலிருந்து
-கோட்டை செல்வம்